ஜெயலலிதா சமாதியில் தீபா அமர்ந்ததன் பின்னணி என்ன?

386

ஜெயலலிதாவின் சமாதி முன்னிலையில் ஜெ.தீபா தியானம் மேற்கொண்டுள்ளது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இதுபோன்று தான் பன்னீர் செல்வமும் ஜெயலலிதாவின் சமாதியில் இருந்தே தனது ஆட்டத்தை ஆரம்பித்தார்.

அவர் ஆரம்பித்து வைத்த அந்த ஆட்டத்தால், இன்றைய தமிழக அரசியல் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தனது கணவரோடு சென்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை வைத்து அங்கு தியானத்தில் அமர்ந்துள்ளார்.

வரவிருக்கின்ற ஆர்கே நகர் தேர்தலில், போட்டியிடுவேன் என அறிவித்துள்ள தீபா, அதற்காக ஆசிர்வாதம் வாங்குவதற்காக ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றதாக தீபாவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், பன்னீர் செல்வத்தை போன்று தீபாவும் ஏதேனும் பூதாகரத்தை கிளப்புவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.