நாயை பலாத்காரம் செய்த லொறி ஓட்டுநருக்கு நேர்ந்த கதி!!

254

சென்னையில் நபர் ஒருவர் நாயை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

மேடவாக்கத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. தெருவில் நாயுடன் நபர் ஒருவர் தவறாக ஈடுபடுவதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர், புளூகிராஸ் அமைப்பிற்கு தகவல்கள் கொடுத்துள்ளனர்.

சம்பவயிடத்திற்கு பொலிசாருடன் விரைந்த புளூகிராஸ் அமைப்பினர், நாயை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சோதனை செய்து பார்ததில் நாய் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, புளூகிராஸ் அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் குற்றவாளியை கைது செய்த பொலிசார் அவனிடம் நடத்திய விசாரணையில், அவன் திண்டுக்கல்லைச் சேர்ந்த லொறி ஓட்டுநர் முருகன் எனத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர் மீது இயற்கைக்கு மாறாக உடலுறவு கொள்ளுதல் என்ற சட்டத்தின் படி பிணையில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.