நடிகர், நடிகைகளுக்குள் வேற்றுமை இல்லை : கன்னட படவிழாவில் கமலஹாசன்!!

287

kamal

இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 21ம் திகதி துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக கன்னட திரைப்பட விழாவும் தெலுங்கு திரைப்பட விழாவும் நடந்தது.

கன்னட பட விழாவில் நடிகர் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, லீலாவதி, ஹேமா, பாரதிவிஷ்ணு வர்த்தன், மற்றும் நடிகர்கள் ராஜேஷ், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீநாத், சிவராம், உமேஷ், முரளி, ஒய்.ஆர். சாமி, பங்கஜ், வினோத்ராஜ், யோகேஷ், நடிகைகள் அனுபிரபாகர், ஜெயந்தி, ராகினி, ஹர்ஷிதா, லைலா, பாவனா, உள்பட 67 பேர் விருதுகள் பெற்றனர்.

விழாவில் கமலஹாசன் பேசியதாவது..

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறோம். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் பட விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த விழாக்கள் தனித்தனியானது என்று கருதக்கூடாது. அனைத்தும் ஒன்றுதான். திரைப்பட கலைஞர்களாகிய நாம் சினிமா துறை என்ற ஒரே கூரையின் கீழ் வாழ்கிறோம். ஒரே குடும்பமாக வாழ்கிறோம். நமக்கும் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லை. அந்த சினிமா துறையில் நானும் ஒருவனாக இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

நான் கன்னட திரைப்பட விழாவில் பங்கேற்க வந்ததற்காக சிலர் நன்றி கூறினர். இந்த விழாவில் என்னை நீங்கள் வரவேற்றதற்காக நான்தான் நன்றி கூறவேண்டும். நீங்கள் என்னை அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் கண்டிப்பாக இதில் கலந்து கொள்வேன். இது கலைஞர்களாகிய நம்முடைய விழா என்று கமலஹாசன் பேசினார்.
தெலுங்கு படவிழாவில் கே.பாலச்சந்தருக்கு விருது வழங்கப்பட்டது.