வவுனியாவில் வெடிக்காத நிலையிலிருந்த ஷெல் மீட்பு!!

325

வவுனியா உலுக்குளம் பகுதியிலுள்ள வெற்றுக் காணியிலிருந்து வெடிக்காத நிலையிலிருந்த ஷெல் ஒன்று கண்டெடுக்கப்பட்டு விஷேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா உலுக்குளம் பகுதியில் இன்று காலை தனது காணியினை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது மண்ணில் புதையுண்ட நிலையில் 60மில்லி மீற்றல் ஷெல்லினை அவதானித்த காணி உரிமையாளர் உடனடியாக உலுக்குளம் பொலிஸ் நிலையில் முறையிட்டுள்ளார்.

இதையடுத்து அங்கு சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் இன்று காலை செயலிழப்புச் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.