வவுனியாவில் காணாமல்போன மாணவன் மன்னாரில் கண்டுபிடிப்பு!!

530

நேற்றைய தினம் வவுனியாவில் காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட அனுராஜா லலோசன் என்ற 14 வயது மாணவன் இன்று மதியம் மன்னார் பிரதேசத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட மாணவன் நேற்றைய தினம் (13) அவனது வீட்டில் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக மன்னார் பிரதேசத்திலுள்ள பாதிரியார் ஒருவரிடம் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஊடகங்களில் மாணவனைக் காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த செய்தி வெளியானதை அறிந்ததும் குறிப்பிட்ட பாதிரியார் மாணவனை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் மாணவனின் பெற்றோரை அழைத்து நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர். மேலும் எதிர்வரும் புதன்கிழமை வரையில் குறித்த மாணவனை சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் விடுமாறும் அதன் பின்பு பெற்றோரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்தி : வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனத்திற்குச் சென்ற மாணவனைக் காணவில்லை!!