வவுனியாவில் கடந்த 18 நாட்களாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் கையளிக்கப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று (13.03.2017) 18வது நாளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறும் அரசியல்கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் அவசரகாலச்சட்டத்ததை நீக்குமாறும் கோரி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நீதி வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு பொதுமக்களால் கையப்பமிடப்பட்ட கடிதங்களை அனுப்பும் போராட்டமொன்றும் இடம்பெற்றுவருகின்றது.
இதன் முதற்கட்டமாக இன்று (13.03.2017) காலை 11.30 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் வவுனியா அஞ்சல் அலுவலகத்தில் 1000 கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.