வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் பெண் உட்பட மூவர் கைது!!

364

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், A9 வீதி வைத்தியசாலை சந்தியடியில் உள்ள டயர் கடையில் ஒன்றில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது குறித்த கடையில் இருந்து 2930 மில்லிகிராம், 400 மில்லிகிராம், மற்றும் 790 மில்லி கிராம் கேரள கஞ்சா பொதிகளில் சுற்றப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மூவரையும் கைது செய்துள்ளதாகவும் வவுனியா குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினர் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவர்கள் இன்று வவுனியா நீதிமன்றில் வேறு ஒரு வழக்கில் முன்னிலையாக வேண்டி இருந்ததாகவும் அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட இருந்தமையும் குறிப்ப்பிடத்தக்கது.