மரணத்தில் இணைந்த காதல் : விபத்தில் இருவரும் பலி!!

329

மீகஹதென்னயில் நேற்று இடம்பெற்ற கோரவிபத்தொன்றில் காதலர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீகஹதென்ன, நெளுஹேன பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஹொரவெல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்பக்கத்தில் வந்த டிப்பென்டர் வாகனத்துடன் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த யுவதியை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

பெலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான தனுஜ குடாஆராச்சி என்ற இளைஞம், மீகாஹதென்ன பிரதேசத்தை சேர்ந்த அவரது காதலியான 21 வயதான யுவதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்தினால் இருவரது நண்பர்களும் சோகத்தில் உள்ளதாகவும், பேஸ்புக் பக்கம் முழுவதும் அவர்களது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.