மனைவியை நிர்வாணமாக்கி பிறப்புறுப்பில் சூடு வைத்த கணவன் கைது!!

692

மனைவி மீது எழுந்த சந்­தே­கத்தின் கார­ண­மாக மனை­வியின் பிறப்­பு­றுப்பை நெருப்­பினால் சுட்­டுப்­பொ­சுக்­கிய கணவர் ஒரு­வரை அகு­ரெஸ்ஸ பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இரண்டு பிள்­ளை­களின் தாயான இப்பெண் மீது அவ­ரது கண­வ­ருக்கு அதீத சந்­தேகம் ஏற்­பட்­ட­மையால் இரு­வ­ருக்­கி­டையில் தொடர்ந்தும் சண்டை, சச்­ச­ர­வுகள் ஏற்­பட்டு வந்­துள்­ளன.

சம்­பவ தினத்­தன்று காலை சந்­தே­க­நபர், தனது பிள்­ளைகள் இரு­வ­ரையும் பாட­சா­லையில் விட்­டு­விட்டு வீடு திரும்­பி­யி­ருந்த போது வீட்டு வாசலை சுத்தம் செய்­து­கொண்­டி­ருந்த மனை­வியை சந்­தேக கண்­கொண்டு பார்த்­த­துடன் அவர் மீது தாக்­குதல் நடத்­தி­ய­துடன் நிர்­வாண­மாக்கி விறகு கட்­டையை எடுத்து பிறப்­பு­றுப்பில் சூடு வைத்­துள்ளார்.

அதன்­போது, தனது கண­வனின் பிடி­யி­லி­ருந்து தப்­பிச்­சென்ற அப்பெண் அக்கு­ரெஸ்ஸ பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்று தனது கண­வரின் பெயரில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

பின்னர் அவரை பொலிஸார் வைத்திய ­சா­லையில் அனு­ம­தித்­துள்­ளனர். இச்­சம்­பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, அக்குரெஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.