மனைவி மீது எழுந்த சந்தேகத்தின் காரணமாக மனைவியின் பிறப்புறுப்பை நெருப்பினால் சுட்டுப்பொசுக்கிய கணவர் ஒருவரை அகுரெஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தாயான இப்பெண் மீது அவரது கணவருக்கு அதீத சந்தேகம் ஏற்பட்டமையால் இருவருக்கிடையில் தொடர்ந்தும் சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளன.
சம்பவ தினத்தன்று காலை சந்தேகநபர், தனது பிள்ளைகள் இருவரையும் பாடசாலையில் விட்டுவிட்டு வீடு திரும்பியிருந்த போது வீட்டு வாசலை சுத்தம் செய்துகொண்டிருந்த மனைவியை சந்தேக கண்கொண்டு பார்த்ததுடன் அவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் நிர்வாணமாக்கி விறகு கட்டையை எடுத்து பிறப்புறுப்பில் சூடு வைத்துள்ளார்.
அதன்போது, தனது கணவனின் பிடியிலிருந்து தப்பிச்சென்ற அப்பெண் அக்குரெஸ்ஸ பொலிஸ் நிலையத்துக்கு சென்று தனது கணவரின் பெயரில் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர் அவரை பொலிஸார் வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, அக்குரெஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.