14 வயது சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகம்!!

244

ஆணமடுவ பகுதியில் உள்ள 14 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பேருந்தில் பயணம் செய்யும் போது சந்தித்த நபர் ஒருவரே இவ்வாறு சிறுமியை 4 முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் விடுதி ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி ஒருவரை விடுதிக்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் விடுதி உரிமையாளர், கவனத்திற்கொள்ளாமையால் உரிமையாளரையும் சந்தேநபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி, ஹலவத்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.