மாணவனை அடித்து ஷூக்களை நக்க வைத்த உரிமையாளர் : அதிர வைக்கும் காரணம்!!

570

 
இந்தியாவில் வீட்டின் உரிமையாளர் ஒருவர் வாடகைக்கு தங்கியிருக்கும் மாணவனை அடித்து ஷூக்களை நக்க வைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

பெங்களூருவில் தான் இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் நடந்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் பெங்களூருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்துள்ளான்.

மாணவன் அதிகப்படியான தண்ணீர் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டிய வீட்டின் உரிமையாளர் Hemanth Kumar, மாணவனை அடித்து ஷூக்களை நக்க வைத்துள்ளார்.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பொலிசில் புகார் அளித்ததையடுத்து, வீட்டு உரிமையாளர் Hemanth Kumarஐ அதிரடியாக கைது செய்த பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எனினும், தற்போது Hemanth Kumar பிணையில் வெளியே வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.