SPLA-IO இயக்கத்தினால் கடத்தப்பட்ட தமிழர்கள்!!

272

தென் சூடானில் எண்ணெய் நிறுவனத்தில் பணிப்புரிந்த தமிழகத்தை சேர்ந்த இருவர் கடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

SPLA-IO இயக்கத்தினால் கடந்த 8ஆம் திகதி குறித்த இருவரும் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கன் குளத்தை சேர்ந்த மிதுன் கணேஷ் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எட்வர்ட் ஆகியோரே கடத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த இருவரையும் மீட்பதில் இரு நாடுகளும் ஆர்வம் காட்டவில்லை என கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடத்தப்பட்ட முதல் இரு நாட்களில் காட்டிய ஆர்வத்தை தற்போது இரு நாடுகளும் காட்டவில்லை. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை ஆமை வேகத்தில் முன்னெடுக்கப்படுவதாக கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.