யாழில் அழகுபடுத்தும் நிலையத்தில் வைத்து மனைவியை கோடாரியால் தாக்கிய கணவன்!!

254

யாழில் கணவனொருவர் மனைவி மீது கோடாரியால் தாக்கியதால் மனைவி படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். கல்வியங்காடு 03 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த செந்தூரன் ஜெயவதனி என்பவரே இவ்வாறு கோடாரி வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், யாழ். திருநெல்வேலி சந்தியில் உள்ள அழகுபடுத்தல் நிலையத்தில் வைத்து மனைவி மீது கணவனால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளதுடன் மனைவியின் தகாத உறவுகளை அறிந்த கணவர் இவ்வாறு கொடூரமான முறையில் மனைவியை வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறித்த பெண்னுடன் தொடர்பு வைத்திருந்ததுடன், கதிர்காமம் வரை சென்ற சம்பவம் பொலிஸ் நிலையத்திற்கு தெரியவந்ததை அடுத்து அந்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் திணைக்களத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் மனைவியின் இவ்வாறான தொடர்புகளை அறிந்தாலேயே குறித்த கணவர் மனைவியை அழகுபடுத்தல் நிலையத்தில்வைத்து கோடாரியால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.