இறுதியாண்டு பரீட்சைக்கு சென்ற பல்கலைக் கழக மாணவனுக்கு நேர்ந்த கதி!!

212

பிலியந்தலை – கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இறுதி பரீட்சையில் கலந்து கொள்வதற்காக சென்ற பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பொரலஸ்கமுவ மற்றும் வெரஹெர பிரதேசத்திற்கும் இடையே நேற்று மாலை இடம்பெற்ற இந்த வாகன விபத்திலேயே குறித்த மாணவன் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சொகுசு மோட்டார் வாகனம் ஒன்றும் உந்துருளியும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைந்த சுகாதார பீடத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்று வந்த மாணவர் எனவும், இறுதி பரீட்சையில் கலந்து கொள்வதற்காக சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த விபத்தில் உயிரிழந்த ஹெரகஸ்கட பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, படுகாயமடைந்த சக மாணவன் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.