வவுனியாவில் சைட்டம் (SAITM) பற்றிய திறந்த கலந்துரையாடல்!!

478

சைட்டம் – மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பற்றியும் அதுசார்ந்த சமகாலப் பிரச்சினைகள் பற்றியும் ஒரு திறந்த கலந்துரையாடல், வவுனியா வைத்தியர்களின் ஒன்றிணைவில் இடம்பெறவுள்ளது.

நண்பர்கள் அமையத்தின் ஏற்பாட்டில் வரும் 19.03.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் முத்தையா மண்டபத்தில் இடம்பெறும் இந்நிகழ்வில் சைட்டம் பற்றிய கேள்விகள், சந்தேகங்கள் அனைத்தையும் கலந்துரையாட ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றார்கள்.

இந்நிகழ்வில் சிரேஸ்ட வைத்திய அதிகாரி சி.சுதாகரன், யாழ் மருத்துவபீட மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் வைத்தியக்கலாநிதி போல் பிறைற் பெனடிக்ட் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

கலந்துரையாடலை வைத்திய கலாநிதி செ.மதுரகன் ஒழுங்கமைக்கவுள்ளார். இதற்கு மேலாக பல மருத்துவர்கள், கல்வியியலாளர்கள், மருத்துவ மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பல தரப்பினரும் கலந்துகொள்ள உள்ளனர்.

சைட்டம் பற்றிய சார்பான, எதிரான, நடுநிலையான கருத்துக்களைக் கொண்டுள்ள பொதுமக்கள், பெற்றோர் அனைவரையும் பங்கேற்க ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றார்கள்.