வவுனியாவில் காணாமற்போன உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணி!!

263

 
வவுனியாவில் கடந்த 19வது நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுழ்ற்சி முறையிலான காணாமற்போன உறவுகளின் உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு இன்று (14.03) வவுனியா கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினத்தின் இறுதியில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், சீடோ அறிக்கையகத்திற்கான பெண்கள் ஒன்றியம் என்பன இணைந்து பேரணியாக கலாச்சார மண்டபத்திலிருந்து போராட்டம் இடம்பெறும் இடத்திற்குச் சென்று தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

கடந்த 19 நாட்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் காணாமற் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை, அவசரகாலச்சட்டத்தினை உடனே இரத்துச் செய்து காணாமற் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு பதில் கூறவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தும் தமது மக்கள் பிரதிநிதிகள் குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் தமது நியாயமான போராட்டத்திற்கு நேரில் வந்து வாக்குறுதி அளிக்கும் வரையில் தமது போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.