வவுனியா பாடசாலைகளுக்கு இந்திய துணைத் தூதரகத்தினால் இசைக்கருவிகள் அன்பளிப்பு!!

326

 
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மற்றும் கனகராயன்குளம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு இந்தியத் துணைத் தூதரகத்தினால், இன்னிசை வாத்தியக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜனால், வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் அதிபரிடம் இவ் வாத்தியக்கருவிகள் இன்று (14.03.2017) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

அண்மையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் நுழைவாயில் திறப்பு விழாவிற்கு இந்திய துணைத் தூதுவர் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தபோது, பாடசாலையின் அதிபர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த இன்னிசை வாத்தியக்கருவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தின் அதிகாரிகள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.