153 ஆவது தட­வை­யாக குற்றம் புரிந்த பிக்­பொக்கெட் ராணிக்கு சிறைத்­தண்­டனை!!

368

153 ஆவது தட­வை­யாக பிக்­பொக்கெட் அடித்­­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்ட ஒரு பெண்­ணுக்கு பிரித்­தா­னிய நீதி­மன்றம் இரண்­டரை வருட சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது.

40 வய­தான மார்­கரெட் ஜோன்சன் எனும் இப் பெண், முதி­ய­வர்கள், கர்ப்­பி­ணிகள் உட்­பட பல­ரிடம் பொருட்­களை அப­க­ரித்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டவர். இதற்­காக ஏற்­கெ­னவே பல தடவை சிறைத்­தண்­ட­னையும் பெற்­றி­ருந்தார்.

இதனால், “பிக்­பொக்கெட் குயின் (பிக்­பொக்கெட் ராணி) எனும் பட்­டப்­பெ­யரும் இவ­ருக்குள்­ளது.

கடந்த மாதம் 2 ஆம் திகதி சுப்பர் மார்கெட் ஒன்றில் வைத்து 76 வய­தான பெண் ஒரு­வரின் கைப்­பையை இவர் இர­க­சி­ய­மாக பறித்துச் சென்றார். ஆனால், இவரின் நட­வ­டிக்கை கண்­கா­ணிப்பு கெம­ராக்­களில் பதி­வா­கின.

ஏற்­கெ­னவே செய்த குற்­ற­மொன்­றுக்­காக சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து, சிறை­யி­லி­ருந்து வெளி­யான 6 ஆவது நாளில் அவர் மீண்டும் குற்­றச்­செ­யலில் ஈடு­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இது தொடர்­பாக பேர்­மிங்ஹாம் நீதி­மன்­றத்தில் நடை­பெற்ற வழக்கில் மார்கரெட் ஜோன்­ச­னுக்கு நீதி­மன்றம் இரண்­டரை வருட சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­தது.

சமூ­கத்தில் பல­வீ­ன­மான நிலை­யி­லுள்ள மக்­களின் பொருட்­களை அப­க­ரிக்கும் “மார்கரெட் ஜோன்சனைப் பற்றி வர்ணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை என பொலிஸ் சேர்ஜன்ட் ஜூலியா ஸ்லேட்டர் தெரிவித்துள்ளார்.