வவுனியாவில் 20வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

744

 
வவுனியாவில் கடந்த 20 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (15.03.2017) 20வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக வவுனியாவில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் கண்டனப் பேரணிகளும் இடம்பெற்றபோதும் இவர்களுக்கு சரியான தீர்வு வழங்கப்படாமையால் தொடர்ந்து 20வது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.