வவுனியாவில் இடம்பெறும் உணவுதவிர்ப்புப் போராட்டத்திற்கு புகையிரதக் கடவைக் காப்பாளர் சங்கம் ஆதரவு!!

239

 
வவுனியாவில் கடந்த 20 தினங்களாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பினை மேற்கொண்டு வரும் காணாமற்போன உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று (15.03.2017) காலை 10 மணியளவில் போராட்ட இடத்திற்குச் சென்ற வவுனியா மாவட்ட புகையிரதக்கடவைக் காப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக வவுனியாவில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் கண்டனப் பேரணிகளும் இடம்பெற்றபோதும் இவர்களுக்கு சரியான தீர்வு வழங்கப்படாமையால் தொடர்ந்து 20வது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.