வவுனியாவில் தொடர்ச்சியாக 50 வருடம் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியவர் கௌரவிப்பு!!

463

 
வவுனியாவில் 1966 முதல் 2016வரை ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளரைக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் வவுனியாவிலுள்ள விருந்தினர் விடுதியில் வவுனியா வர்த்தக சங்கம் சார்பில் நிறுவனத்தின் உரிமையாளர் சி.ஞானசம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது.

50 வருடகாலம் நிறுவனத்தில் பணியாற்றிய திரு.திருமதி.சுப்பிரமணியம் நித்தியானந்தன் தம்பதியினர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராசலிங்கம், பிரபல தொழிலதிபர்களான நிறுவனத்தின் உரிமையாளர் சி.ஞானசம்பந்தன், மற்றும் எஸ்.இராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு கௌரவித்தனர்.

இவர் வவுனியா மாவட்டத்தில் 50 வருடங்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றியவர் என்ற பெயரையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.