புலமைப்பரிசில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

455

 
வவுனியா இறம்பைக்குளம் ஈஷி பூரண சுவிஷேச சபையின் ஆயர் பி.எம்.இராஜசிங்கம் தலைமையில் 2017ம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள 150ற்கும் மேற்பட்ட மன்னார் மாவட்டத்தில் நானாட்டான், அரிப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வறியமாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை 3மணியளவில் நானாட்டான் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதான பேச்சாளர் ஜே.அலன் நீல், பிரதான ஆயர், ஜக்கிய அமெரிக்கா எலியாவின் அப்பம் மிஷன், பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் பாலியக்கார, நானாட்டான், அரிப்பு பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் என பலரும் கலந்து கொண்ட நிகழ்வின் இறுதியில் வன்னி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 5 பொலிஸ் நிலையங்களின் தேவை கருதி கணணிகள் வழங்கிவைக்கப்பட்டது.