இரவில் நீண்ட நேரம் செல்போனில் பேசிய மனைவி : ஆத்திரத்தில் கொலை செய்த கணவன்!!

622

மனைவி தொடர்ந்து இரவில் செல்­போனில் பேசி­யதால் ஆத்­தி­ர­ம­டைந்த கணவன் மனை­வியை கொலை செய்த சம்ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. தமி­ழ­கத்தின் குன்­றத்தூர், திரு­நா­கேஸ்­வரம், துரை­சாமி வீதியைச் சேர்ந்­தவர் சுரேஷ்­குமார் முத்­து­ராமன் (31), பெயின்டர். இவ­ரது மனைவி தன­லட்­சுமி (20). அதே பகு­தி­யி­லுள்ள அலங்­காரக் கடையில் பணி­பு­ரிந்து வந்தார்.

இவர்­க­ளுக்கு கடந்த 10 மாதத்­துக்கு முன் திரு­மணம் நடந்­துள்­ளது. இந்­நி­லையில் கடந்த சில நாட்­க­ளாக தன­லட்­சுமியின் செல்­போ­னுக்கு அடிக்­கடி அழைப்பு வந்­த­தா­கவும், அப்­போ­தெல்லாம் அவர் யாரும் இல்­லாத இடத்­துக்கு செல்­போனை எடுத்துச் சென்று நீண்ட நேரம் பேசி­ய­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

இது­கு­றித்து சுரேஷ்­குமார் கேட்­ட­போது, சரி­யான பதி­ல­ளிக்­க­வில்லை எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதனால், சுரேஷ்­கு­மா­ருக்கு மனைவி மீது சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில், கடந்த வாரம் தன­லட்­சு­மியின் செல்­போ­னுக்கு அழைப்பு வந்­துள்­ளது.

அப்­போது, அவர் போனுடன் வெளியே சென்று நீண்ட நேரம் பேசி­யுள்ளார். இதனால், ஆத்­தி­ர­ம­டைந்த சுரேஷ்­குமார், வெளியே சென்று, ‘இந்த நேரத்தில் யாரிடம் போனில் பேசு­கிறாய்,’ என கேட்­டுள்ளார்.

அதற்கு, ‘என்­னுடன் வேலை செய்யும் தோழி­யிடம் பேசு­கிறேன்,’ என தன­லட்­சுமி கூறி­யுள்ளார். உடனே, ‘போனைக் கொடு நான் பேசு­கிறேன்,’ என சுரேஷ்­குமார் தன­லட்­சு­மி­யி­ட­மி­ருந்து செல்போனை பிடுங்­கி­யுள்ளார். அவர், போனைக் கொடுக்க மறுத்­ததால் இரு­வ­ருக்கும் இடையே கடும் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டுள்­ளது.

இதில், ஆத்­தி­ர­ம­டைந்த சுரேஷ்­குமார், வீட்­டினுள் சென்று சமை­ய­ல­றையிலிருந்த கத்­தியை எடுத்து வந்து தன­லட்­சு­மியை சர­மா­ரி­யாக குத்­தி­யுள்ளார். இதில், தன­லட்­சுமி இரத்த வெள்­ளத்தில் கீழே வீழ்ந்­துள்ளார். இத­னை­ய­டுத்து, அங்­கி­ருந்து சுரேஷ்­குமார் தப்பி ஓடி­யுள்ளார்.

தன­லட்­சு­மியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி­ச்சென்ற அக்கம் பக்­கத்­தினர், அவரை மீட்டு குரோம்­பேட்டை வைத்­தி­ய­சா­லைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்­றுள்­ளனர். ஆனால், செல்லும் வழி­யி­லேயே தன­லட்­சுமி பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­துள்ளார்.

இது­கு­றித்து, குன்றத்தூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, தனலட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், தப்பியோடிய சுரேஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.