வவுனியாவில் இன்று (16.03.2017) காலை 10 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருங்கிணைந்த குழுவினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
நிலைமாறு கால நீதிக்கான அமைச்சகம் ஒன்றை உருவாக்கு என ஜ.நாவை வலியுறுத்தி குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
ஒரு மணிநேரமாக தமது போராட்டத்தை மேற்கொண்ட பின்னர் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மேற்கொள்ளும் போராட்ட இடத்திற்குச் சென்று தமது ஆதரவினையும் வழங்கியுள்ளனர்.