சிறு­வனை அடித்துக் கொன்ற வளர்ப்புத் தாயி­ட­மி­ருந்து சூடு வைக்­கப்­பட்ட நிலையில் சிறுமி மீட்பு!!

246

மட்­டக்­க­ளப்பு நாவற்­குடா பிர­சேத்தில் சிறுவன் ஒரு­வனை அடித்துக் கொலை செய்­த­தாக சந்­தே­கிக்­கப்­படும் பெண் வளர்த்து வந்தார் எனக் கூறப்­படும் சிறுமி ஒரு­வரை மீட்­டுள்­ள­தாக காத்­தான்­குடி பொலிஸார் தெரி­வித்­தனர்.

காத்­தான்­குடி பொலிஸ் பிரி­வி­லுள்ள மட்­டக்­க­ளப்பு நாவற்­குடா பிர­தேசத்தில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்பெற்ற 4வயது சிறு­வனின் கொலைச் சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்ள மட்­டக்­க­ளப்பு நாவற்­குடா பிர­சேத்­தி­லுள்ள வளர்ப்புத் தாயான பெண் வளர்த்து வந்த 8 வய­தான சிறு­மியே மீட்­கப்­பட்­ட­வ­ராவார்.

குறித்த சிறுமி மட்­டக்­க­ளப்பு கொக்­கட்­டிச்­சோலை பிர­தே­சத்தைச் சேர்ந்­தவர் என்றும் அங்­குள்ள ஆசி­ரியர் ஒரு­வரின் மூல­மாக இந்த சிறு­மியை பெற்று வளர்த்து வந்­த­தா­கவும் ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்­துள்­ள­தாக காத்­தான்­குடி பொலிஸார் தெரி­வித்­தனர்.

குறித்த சிறு­மியை வளர்ப்புத் தாய் பல தட­வைகள் அடித்­துள்­ள­தா­கவும் சூடு வைத்­துள்­ள­தா­கவும் விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்­துள்­ள­தா­கவும் பொலிஸார் மேலும் கூரினார்.

குறித்த சிறு­மி­யி­டமும் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வருவதாகவும் சிறுமியை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.