மட்டக்களப்பு நாவற்குடா பிரசேத்தில் சிறுவன் ஒருவனை அடித்துக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண் வளர்த்து வந்தார் எனக் கூறப்படும் சிறுமி ஒருவரை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 4வயது சிறுவனின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மட்டக்களப்பு நாவற்குடா பிரசேத்திலுள்ள வளர்ப்புத் தாயான பெண் வளர்த்து வந்த 8 வயதான சிறுமியே மீட்கப்பட்டவராவார்.
குறித்த சிறுமி மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அங்குள்ள ஆசிரியர் ஒருவரின் மூலமாக இந்த சிறுமியை பெற்று வளர்த்து வந்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியை வளர்ப்புத் தாய் பல தடவைகள் அடித்துள்ளதாகவும் சூடு வைத்துள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூரினார்.
குறித்த சிறுமியிடமும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சிறுமியை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.