கள்ளக்காதலுக்காக கணவனின் தந்தை மற்றும் அவரது சகோதரனை பெண்ணொருவர் கொலை செய்த சம்வபமொன்று மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழகத்தின் வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த நெமிலி தாலுக்கா புன்னை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிமாஜிகான். இவரது மனைவி சபீரா. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். ஜிமாஜிகானின் அண்ணன் அப்துல்காதர், மாமனார் ஷாஜகான், அண்ணனின் மனைவி ரமீஜா ஆகியோர் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்துல்காதர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்து 8 மாதங்கள் கழித்து தந்தை ஷாஜகானும் வீட்டு வாசலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சோகத்தில் குடும்பத்தினர் யாரும் இரு சம்பவங்கள் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் ஜிமாஜிகானுக்கும் அவரது மனைவி சபீராவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
சில மாதங்கள் கழித்து மனம் மாறிய சபீரா, ஜிமாஜிகானை சந்தித்து தன்னோடு சேர்ந்து வாழுமாறு கூறி தான் செய்த தவறுகளுக்கு எல்லாம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
அப்போது ஜிமாஜிகானின் அண்ணனும் தந்தை யும் சாதாரணமாக இறக்கவில்லை என்றும் தன்னுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த கிருஷ்ணன் தான் கொன்றார் எனவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த ஜிமாஜிகான் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.