கள்ளக்காதலுக்காக கணவனின் தந்தை மற்றும் சகோதரனைக் கொன்ற மனைவி!!

276

கள்­ளக்­கா­த­லுக்­காக கண­வனின் தந்தை மற்றும் அவ­ரது சகோ­தரனை பெண்­ணொ­ருவர் கொலை செய்த சம்­வ­ப­மொன்று மூன்று ஆண்­டு­க­ளுக்கு பின்னர் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது.

தமி­ழ­கத்தின் வேலூர் மாவட்டம் அரக்­கோணம் அடுத்த நெமிலி தாலுக்கா புன்னை கிரா­மத்தைச் சேர்ந்­தவர் ஜிமா­ஜிகான். இவ­ரது மனைவி சபீரா. இவர்­க­ளுக்கு இரு மகன்கள் உள்­ளனர். ஜிமா­ஜி­கானின் அண்ணன் அப்­துல்­காதர், மாமனார் ஷாஜகான், அண்­ணனின் மனைவி ரமீஜா ஆகியோர் கூட்­டுக்­கு­டும்­ப­மாக ஒரே வீட்டில் வசித்து வந்­துள்­ளனர்.

இந்­நி­லையில் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்­துல்­காதர் தூக்கிட்டுத் தற்­கொலை செய்து கொண்டார். அவர் இறந்து 8 மாதங்கள் கழித்து தந்தை ஷாஜ­கானும் வீட்டு வாசலில் மர்­ம­மான முறையில் இறந்து கிடந்தார்.

இரு­வரும் அடுத்­த­டுத்து உயி­ரி­ழந்த சோகத்தில் குடும்­பத்­தினர் யாரும் இரு சம்­ப­வங்கள் குறித்து பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு தெரி­விக்­க­வில்லை.

இந்­நி­லையில் ஜிமா­ஜி­கா­னுக்கும் அவ­ரது மனைவி சபீ­ரா­வுக்கும் கருத்­து­வே­று­பாடு ஏற்­பட்டு இரு­வரும் பிரிந்­தனர்.
சில மாதங்கள் கழித்து மனம் மாறிய சபீரா, ஜிமா­ஜி­கானை சந்­தித்து தன்­னோடு சேர்ந்து வாழு­மாறு கூறி தான் செய்த தவ­று­க­ளுக்கு எல்லாம் மன்­னிப்புக் கோரி­யுள்ளார்.

அப்­போது ஜிமா­ஜி­கானின் அண்­ணனும் தந்­தை யும் சாதா­ர­ண­மாக இறக்­க­வில்லை என்றும் தன்­னுடன் கள்ளத் தொடர்பு வைத்­தி­ருந்த கிருஷ்ணன் தான் கொன்றார் எனவும் கூறி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து அதிர்ச்­சி­ய­டைந்த ஜிமா­ஜிகான் பொலி­ஸா­ரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.