விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர்களாக செயற்பட்டு, காணாமற்போன இருவரை மீட்டுத்தருவதாகக் கூறி நிதி மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.
விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக செயற்பட்டு, இறுதி யுத்தத்தில் காணாமற்போன இளம்பரிதியை விடுவித்துத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்யப்பட்டதாக அவரது மாமியார் தெரிவித்தார்.
இதேவேளை, விடுதலைப்புலிகளின் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் கரிகாலனை விடுவித்துத் தருவதாகக் கூறி தம்மை அச்சுறுத்தி வெளிநாட்டிலுள்ள உறவினர்களிடமிருந்து நிதி மோசடி செய்யப்பட்டதாக அவரின் மாமியார் தெரிவித்தார்.
இந்த இரு சம்பவங்களும் 2011 ஆம் ஆண்டு இடம்பெற்றதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
-News First –