இளைஞனின் மரணத்தால் உயிர் வாழும் இருவர் : குடும்பத்தாரின் மனிதாபிமானம்!!

222

பொலன்னறுவையில் மூளைச்சாவடைந்த இளைஞரின் இரண்டு சிறுநீரகத்தில் இருவர் உயிர் வாழும் தகவல் வெளியாகியுள்ளது.

திடீர் விபத்துக்குள்ளாகி சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவடைந்த இளைஞரின் இரண்டு சிறுநீரகம் தானம் வழங்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை வைத்தியசாலையினால் இந்த சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், 17 வயதுடைய பாடசாலை மாணவன் மற்றும் கண்டி வைத்தியசாலையில் சிறுநீரக பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 38 வயதுடைய நபருக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

திடீர் விபத்துக்குள்ளாகி மூளைச்சாவடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 21 வயதுடைய இளைஞரான W.அகில மனோஷ் எனபவரின் சிறுநீரகங்களே இவ்வாறு பொருத்தப்பட்டுள்ளது.

அகில மனோஷின் தாயார் பொலன்னறுவை வைத்தியாலையில் மூத்த உதவியாளராக செயற்படுகின்றார்.

திருமணம் முடித்துள்ள அகில மனைவியின் மற்றும் பெற்றோர் அனுமதி வழங்குவதற்கு இணங்கியமையினால் மரணத்தை நெருங்கியிருந்த இருவர் மீண்டும் வாழ சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.