தந்தை முன்னே மகள்களை பலாத்காரம் செய்த 13 பேர் கொண்ட கும்பல் : பழிக்குப் பழி வாங்கிய கொடூர சம்பவம்!!

261

குஜராத்தில் இரண்டு மகள்களை கடத்திய கும்பல், தந்தை கண்முன்னரே அவர்களை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் தாகோத் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 13 வயது மற்றும் 15 வயதுள்ள இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் இவருக்கு ஒரு மகன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அவரது மகன் மது வழக்கு தொடர்பாக பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் பொலிசாரிடம் தனக்கு மது வழங்கியர் குமாத் பாரியா என்று கூறியுள்ளார். இதனால் பொலிசார் குமாத் பாரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த குமாத் பாரியா இதற்கு பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று நினைத்துள்ளார். இதனால் கடை நடத்தி வந்தவரின் இரண்டு மகள்களையும் குமாத் பாரியா 13 பேர் கொண்ட கும்பலுடன் ஒரு சொகுசு காரில் கடத்தியுள்ளார்.

அதைத் தொடர்ந்து அவர்களின் தந்தையும் கடத்தியுள்ளனர். அப்போது நான்கு பேர் இரண்டு மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பாக செல்ல சொகுசு காரில் இருந்த கும்பல், தந்தை முன் அந்த இரண்டு இளம் பெண்களையும் பாலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும் அவர் என்னை பொலிசில் காட்டிக் கொடுத்தற்கு உன் மகனை பழிவாங்குவதற்காகத்தான் உன் மகளை பலாத்காரம் செய்தோம் என்று குமாத் பாரியா கூறியுள்ளார்.

பின்னர் அவர்களை காரை விட்டு இறக்கிவிட்டு சென்றுள்ளனர். பொலிசாரிடம் இதுகுறித்து புகார் அளிக்கக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர். இது குறித்து அந்த இளம்பெண்களின் தந்தை புகார் அளிக்க 13 பேரில் குமாத் பாரியா உள்பட ஐந்துபேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 8 பேரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.