வவுனியாவில் ஐ.நாவை இரண்டு வருட காலஅவகாசம் வழங்க வேண்டாம் எனக் கோரி போராட்டம்!!

634

 
வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தில் இன்று (17.03.2017) பிற்பகல் 2.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியிலிறங்கி போரட்டத்ததை மேற்கொண்டனர்.

ஐ.நாவே கால அவகாசம் நீடிப்பு வழங்கி காணாமற்போனோருக்கு துரோகம் இழைக்காதே, கடத்தியவர்களை காப்பாற்ற காலநீடிப்பு, தெருவில் இருக்கும் தாய்மார்களின் கண்ணீருக்கு பதில் என்ன போன்ற வாசகங்களைத்தாங்கியவாறு கதறி அழுது வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்ட இடத்திற்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா அவர்களுடன் கலந்துரையாடினார்.