புத்தளத்தில் மூன்று மூடை வாக்குச் சீட்டுக்கள் மீட்பு!!

612

ele

புத்தளம் பிரதேசத்தில் உள்ள கல்லூரியின் கட்டடத்தில் இருந்து மூன்று மூடைகளில் சுமார் ஜயாயிரம் வாக்குச் சீட்டுகள் பொது மக்களினால் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் மக்களும் மாவட்ட அரச அதிபருக்க அறிவித்த நிலையில் அரச அதிபர் அங்கு செல்வதற்கு முன்னர் இராணுவத்தினரும் பொலிஸாரும் கல்லூரியை சுற்றி பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோசம் எழுப்பி இராணுவத்தை வெளியேறுமாறு வற்புறுத்தினர். எனினும் மாட்ட அரசாங்க அதிபர் அவ்விடத்திற்குச் சென்றுள்ளார்.