முகமாலை முன்னரங்கக் காவலரண்கள் இருந்த பகுதியூடாக கம்பிக்கட்டைகள் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம், கண்ணிவெடியில் சிக்கியதில் அதில் பயணம் செய்த ஒருவர் பலியானதுடன் இருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அறத்தி நகர், அல்லிப்பளையினைச் சேர்ந்த அற்புதராசா சுதாகரன் (30) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், அதே இடத்தினைச் சேர்ந்த குகானந்தன் சுதாகரன் (17) , துரைசிங்கம் நிரோஜன் (17) ஆகியோர் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.