பிராந்தியத்தின் வீதி உணவு தொடர்பாக, புதிய பரிணாமம் ஒன்றை உருவாக்கி அதில் களியாட்டங்களையும், குதூகலத்தையும் கலந்து வித்தியாசமான, அனுபவத்தை, ‘கொழும்பு வீதி உணவுத் திருவிழா 2017’ பெற்றுத்தரவிருக்கிறது. பெயார்வே ஹொட்டேல் நிறுவனம் இதனை ஏற்பாடு செய்து அனுசரணையையும் வழங்குகிறது.
இன்று 18 ஆம் திகதி ஆரம்பமாகி, மே மாதம் 20 ஆம் திகதி வரை சனிக்கிழமைகள் தோறும் மாலை 6 மணிமுதல் நள்ளிரவு வரை இந்த உணவுத் திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையிலுள்ள ஆஸ்பத்திரி வீதி, திருவிழா களியாட்டங்களுடன், பல்வேறு இசைநிகழ்ச்சிகளைக் கொண்டதாக, கலைஞர்கள் உட்பட பிரமுகர்களினால் நிறையவுள்ளது.
நாவூறச் செய்யும் அற்புதமான சுவையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உணவு வகைகளின் ஒன்றுதிரட்டலே இங்கு பிரதான அம்சமாக அமைந்திருக்கும். உணவு வகைகளில் புதிய பரிணாமத்தை அடைந்து கொள்ள வழிவகுக்கும் கொழும்பு வீதி உணவுத்திருவிழா சுவையினதும், கலையினதும் சங்கமமாக திகழவுள்ளது.
எலிபன்ட் ஹவுஸ் நிறுவனத்தின் இணை அனுசரணையுடன், Ballzy’s Entertainment நிறுவனமும் இணைந்து கொள்கிறது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை என்பன முக்கிய பங்காளிகளாக இணைந்து கொள்கின்றன.
பெயார்வே ஹோல்டிங்ஸ் குழும லைப்ஸ்டைல் துறையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ் குலதுங்க இதுபற்றி கருத்து வெளியிடுகையில், “கொழும்புப் பிரதேசத்தில் காணப்படும் பல வண்ண மயமான கலாசாரங்களின் உணவு வகைகளை உற்று நோக்குகையில், உணவு வேறுபாட்டின் உச்சத்தை அடைந்த ஒரு நகரமாக நாம் கொழும்பை அடையாளம் காண்கிறோம்” என்று தெரிவித்தார்.
“கொழும்பு வீதி உணவுத் திருவிழா ஒரு புத்தம்புதிய அனுபவத்தையும், உணவுத் தோற்றங்களையும் பெற்றுத்தரும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். மேலும் எமது இணை அனுசரணையாளர்கள், பங்காளிகள் மற்றும் நலன்விரும்பிகளின் ஆதரவுகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். பங்குதாரர்களின் ஆர்வம், ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் இந்த நிகழ்வில் நாம் பெரும் வெற்றியடைவோம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.