கொழும்பு வீதி உணவுத் திருவிழா இன்று மாலை முதல் மே 20 வரை சனிக்கிழமைகள் தோறும்!!

488

பிராந்­தி­யத்தின் வீதி உணவு தொடர்­பாக, புதிய பரி­ணாமம் ஒன்றை உரு­வாக்கி அதில் களி­யாட்­டங்­க­ளையும், குதூ­க­லத்­தையும் கலந்து வித்­தி­யா­ச­மான, அனு­ப­வத்தை, ‘கொழும்பு வீதி உணவுத் திரு­விழா 2017’ பெற்­றுத்­த­ர­வி­ருக்­கி­றது. பெயார்வே ஹொட்டேல் நிறு­வனம் இதனை ஏற்­பாடு செய்து அனு­ச­ர­ணை­யையும் வழங்­கு­கி­றது.

இன்று 18 ஆம் திகதி ஆரம்­ப­மாகி, மே மாதம் 20 ஆம் திகதி வரை சனிக்­கி­ழ­மைகள் தோறும் மாலை 6 மணிமுதல் நள்ளிரவு வரை இந்த உணவுத் திரு­விழா நடை­பெறும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கொழும்பு கோட்­டை­யி­லுள்ள ஆஸ்­பத்­திரி வீதி, திரு­விழா களி­யாட்­டங்­க­ளுடன், பல்­வேறு இசை­நி­கழ்ச்­சி­களைக் கொண்­ட­தாக, கலை­ஞர்கள் உட்­பட பிர­மு­கர்­க­ளினால் நிறை­ய­வுள்­ளது.

நாவூறச் செய்யும் அற்­பு­த­மான சுவையின் உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு உணவு வகை­களின் ஒன்­று­தி­ரட்­டலே இங்கு பிர­தான அம்­ச­மாக அமைந்­தி­ருக்கும். உணவு வகை­களில் புதிய பரி­ணா­மத்தை அடைந்து கொள்ள வழி­வ­குக்கும் கொழும்பு வீதி உண­வுத்­தி­ரு­விழா சுவை­யி­னதும், கலை­யி­னதும் சங்­க­ம­மாக திக­ழ­வுள்­ளது.

எலிபன்ட் ஹவுஸ் நிறு­வ­னத்தின் இணை அனு­ச­ர­ணை­யுடன், Ballzy’s Entertainment நிறு­வ­னமும் இணைந்து கொள்­கி­றது. இலங்கை சுற்­றுலா அபி­வி­ருத்தி அதி­கார சபை, நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை என்­பன முக்­கிய பங்­கா­ளி­க­ளாக இணைந்து கொள்­கின்­றன.

பெயார்வே ஹோல்டிங்ஸ் குழும லைப்ஸ்டைல் துறையின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி ரஜீவ் குல­துங்க இது­பற்றி கருத்து வெளி­யி­டு­கையில், “கொழும்புப் பிர­தே­சத்தில் காணப்­படும் பல வண்ண மய­மான கலா­சா­ரங்­களின் உணவு வகை­களை உற்று நோக்­கு­கையில், உணவு வேறு­பாட்டின் உச்­சத்தை அடைந்த ஒரு நக­ர­மாக நாம் கொழும்பை அடை­யாளம் காண்­கிறோம்” என்று தெரி­வித்தார்.

“கொழும்பு வீதி உணவுத் திரு­விழா ஒரு புத்­தம்­பு­திய அனு­ப­வத்­தையும், உணவுத் தோற்­றங்­க­ளையும் பெற்­றுத்­தரும் என்று நாம் எதிர்­பார்க்­கிறோம். மேலும் எமது இணை அனு­ச­ர­ணை­யா­ளர்கள், பங்­கா­ளிகள் மற்றும் நலன்­வி­ரும்­பி­களின் ஆத­ர­வு­க­ளுக்கு எமது நன்­றி­களைத் தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கின்றோம். பங்­கு­தா­ரர்­களின் ஆர்வம், ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் இந்த நிகழ்வில் நாம் பெரும் வெற்றியடைவோம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.