கையில் வளையம் அணிந்து பாட­சாலை சென்­றதை கண்­டித்த பிரதி அதி­பரின் கை விரலை உடைத்த மாணவன்!!

487

பின்­ன­வல பிர­தே­சத்­தி­லுள்ள பிர­பல பாட­சாலை ஒன்றின் பிரதி அதி­பரின் கையின் நடு­வி­ரலை உடைத்த மாணவர் ஒரு­வரை ரம்புக்­கனை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இப்­பா­ட­சா­லையில் 13 ஆம் தரத்தில் கல்வி கற்­று­வரும் குறித்த மாணவர் கையில் வளையம் ஒன்றை அணிந்­த­வாறு பாட­சா­லைக்கு சென்­றுள்ளார். ஒழுக்­கத்­துக்கு முர­ணான வகையில் இவ்­வா­றான அணி­க­லன்­களை பாட­சா­லைக்கு அணிந்­து­வந்­தமை குறித்து அம்­மா­ண­வ­னிடம் பாட­சா­லையின் பிரதி அதிபர் வின­வி­யுள்ளார்.

அதன்­போது, பிரதி அதி­ப­ருடன் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்ட இம்­மா­ணவன் அவரின் கையின் விரல் உடைத்துத் தாக்­குதல் நடத்­தி­யுள்­ள­தாக சக ஆசி­ரி­யர்கள் தெரி­விக்­கின்­றனர். காய­ம­டைந்த பிரதி அதிபர் உட­ன­டி­யாக கேகாலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­துடன் சத்­தி­ர­சி­கிச்­சைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார்.

இவ்­வாறு தாக்­குதல் நடத்­திய மாணவன் இதற்கு முன்­ப­தா­கவும் ஒழுக்­கத்தை மீறிய சம்­ப­வ­மொன்று தொடர்­பாக 14 நாட்கள் வகுப்­புத்­த­டைக்கு உள்­ளா­கி­யி­ருந்­த­வ­ரென பாட­சாலை வட்­டா­ரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் ரம்புக்கனை வலய கல்விப்பணிமனை மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.