நான் ஜெயலலிதாவின் மகன் என்ற இளைஞனுக்கு நீதிபதி கடும் எச்சரிக்கை!!

356

ஜெயலலிதாவின் மகன் நான் என கூறிய இளைஞருக்கு நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், நடிகர் ஷோபன் பாபுவுக்கும் பிறந்த மகன் நான் என ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கூறி வருகிறார்.
மேலும் தனது சொத்துக்களை மீட்டு தாருங்கள் என நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், நான் 1985ம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் திகதி பிறந்தேன். மறைந்த எம்.ஜி.ஆர் முன்னிலையில் ஜெயலலிதா என்னை தத்து கொடுத்து விட்டார்.

அதற்கான ஒப்பந்தத்திலும் இருவரும் கையெழுத்து போட்டுள்ளனர். ஜெயலலிதாவை நான் அடிக்கடி வந்து சந்திப்பேன் எனவும் அவர் அதில் கூறியுள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து பேசிய நீதிபதி, இதை பார்த்தாலே பொய் வழக்கு என தெரிகிறது.

மேலும், இந்த உயர்நீதிமன்றத்தை உங்களது தனிப்பட்ட விளையாட்டுக்கு பயன்படுத்துகிறீர்களா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

உன்னை ஜெயிலுக்கு அனுப்பி விடுவேன் என கிருஷ்ணமூர்த்தியை எச்சரித்த நீதிபதி, நீ சமர்ப்பித்துள்ளது போலி ஆவணம் என தெரிகிறது.

ஜெயலலிதா கையெழுத்திட்ட ஒரிஜினல் பத்திரத்தை திங்கள்கிழமை பொலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.