வவுனியாவில் பிரதான வீதிகளில் நிற்கும் கட்டாக்காலி மாடுகளால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை வீடுகளில் கட்டி வைத்திராமல் வீதிகளில் விடுவதனால் அவை இரவு நேரங்களில் வீதிகளில் திரிவதுடன் இவற்றினால் அதிகமான விபத்துக்களும் இடம்பெறுகின்றன.
இதேவேளை கட்டாக்காலி மாடுகள் வயல் வெளிகளுக்கு சென்று விவசாய நிலங்களில் சேதம் விளைவிப்பதாகவும் தாம் பெரும் நஸ்டம் அடைவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.











