வவுனியாவிலிருந்து ஆசிய மென்பந்து போட்டியில் பங்குபற்றவுள்ள இளைஞன் கெளரவிப்பு!!

376

 
இலங்கை காது கோளாதோர் கிரிக்கட் அணியின் வீரர் பாலகிருஷணன் தர்மசீலனுக்கு வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் மகத்தான கௌரவிப்பு ஒன்று நேற்று (17.03.2017) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாஸன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண சமூகசேவைத்திணைக்கள தலைமைப்பீட சமூக சேவை உத்தியோகத்தர் நா.இராஜமனோகரன், கைதடி முதியோர் இல்ல அத்தியட்சகர் எஸ்.கிருபாகரன், வவுனியா பகவான் ஸ்ரீ சத்திய சாயி நிலைய சார்பில் திரு.சிவகுமாரன் சீட் நிறுவனம் சார்பில் மா.சிவகுமார், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன்,

புன்னகை அமைப்பின் க.சர்மிலன், வவனியா வளாக ஊழியர் நலன்புரிச்சங்கம் சார்பில் எஸ்.பூங்கண்ணன், வவுனியா துடுப்பாட்ட சங்கத்தலைவர் ரஜீபன், விளையாட்டு உத்தியோகத்தர் விந்துஜன், வவுனியா வர்த்தக சங்கப்பிரதிநிதி அல்ஹாஜ் ஆரிப், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சுபாசினி தர்ஸன், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.கெனடி, சமூக ஆர்வலர் மஹா விஸனு ஆலய உறுப்பினர் சுப்ரமணியம், யாழ் மாவட்ட நவாலி, மாதகல், சண்டிலிப்பாய் முதியோர் சங்கப்பிரதிநிதிகள், கிளிநொச்சி மாவட்ட கரைச்சி முதியோர் சங்கப்பிரதிநிதிகள், வவுனியா மாவட்ட வெளிக்குளம் முதியோர் சங்கப்பிரதிநிதி அ.நடராஜா, வாடி வீடு உரிமையாளர் திரு.கதிர்காமராஜா,

வவுனியா சமூக சேவைஉத்தியோகத்தர் சோபனா, கரைச்சி சமூக சேவை உத்தியோகத்தர் ஆரணி, கைதடி முதியோர் இல்ல அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேந்திரா, வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வசந்தரூபன், கலைவாணி, சக்தி விளைட்டுக்கழக உறுப்பினர்கள், சீட் வலுவூட்டல் வளாக மாணவர்கள், வவுனியா வளாக ஊழியர்கள், விரிவுரையாளர்கள், வெளிச்சம் அமைப்பு, ஓகன் நிறுவனம், வரோட் நிறுவனம், வவுனியா சிதம்பரபுர பிரதேச மக்கள், ஓய்வு பெற்ற ரெலிகொம் நிறுவன நிர்வாக உத்தியோகத்தர், சமூக ஆர்வலர் விக்கி, செவிப்புலன் அற்றோர் சங்கத் தலைவர் கணநாதன், விளையாட்டு கழக இளைஞர்கள், பிரஜைகள் குழு சலசலோஜன், தமிழ் விருட்சம் மாணிக்கம் ஜெகன், சங்கர், பயிற்சியாளர் புரட்சி எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர் .

இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட நிகழ்வின் தலைவர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாஸன் இது மாற்றுத்திறனாளிகளாக உள்ளோரின் திறமைகளை இந்த சமூகம் எப்போதும் பாராட்டவும் தட்டிக்கொடுக்க பின் நிற்காது என்பதற்கும் நல்ல எடுத்துக்காட்டு. தர்மசீலனுக்கு மட்டுமல்ல இனிவரும் காலங்களில் இவ்வாறான திறமையான வீரர்களுக்கு நாம் உரிய கௌரவத்தை வழங்க ஏற்பாடுகளை செய்ய திட்டம் ஒன்றை வகுக்க வேண்டிய அவசித்தையும் வலியுறுத்தினார்.

சீட் நிறுவன பிரதிநிதி மா.சிவகுமார், இவ்வீரர் சீட் வலுவூட்டல் வளாகத்தில் கல்வி கற்று தமது திறமைகளை வெளிப்படுத்தியது போல் பல மாணவர்கள் நல்ல திறமைகளுடன் உள்ளனர் . அவர்களையும் இந்த சமூகம் கண்டு கொண்டு எதிர்காலங்களில் ஊக்குவிக்க ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தலைமைப்பீட சமூக சேவை உத்தியோகத்தர் இராஜமனோகரன் தனது உரையில், இன்று இந்த வீரர் பலருக்கு முன்உதாரணமாகிவிட்டார். இனிவரும் காலங்களில் இவர் தக்குரிய தகமைகளைப் பேணி மற்றவர்களையும் நம்பிக்கை பெறவைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தர்மசீலன் தனது பதிலுரையில் தனக்கு இந்த அன்பான உள்ளங்கள் மூலம் கிடைத்த பாராட்டு கௌரவிப்பு உதவிகளை நான் மறக்க மாட்டேன். எனது இந்திய பங்களாதேஷ பயணங்களுக்கு உதவிய அத்தனை பேருக்கும் நன்றிதெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

நிகழ்வில் பலரும் உரை நிகழ்த்தினர். வவுனியா துடுப்பாட்ட சங்கம், வவனியா வளாக ஊழியர் நலன்புரிச்சங்கம், புன்னகை அமைப்பு , திரு. சுப்ரமணியம், வவுனியா வர்த்தக சங்கம், வவுனியா பகவான் ஸ்ரீ சத்திய சாயி நிலையம் , திரு.கதிர்காமராஜா உட்பட வருகை தந்திருந்த பல நல்ல உள்ளங்களின் உதவிடன் 75000 ரூபா வரையான நிதி உதவிகள் இவ் வீரருக்கு கிடைக்கப்பெற்றன.

இவர் நாளை 19.03.2017 தனது பயணத்தை ஆரம்பித்து பங்களாதேஸ் மற்றும் இந்தியா நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றி ஒரு மாதத்தின் பின் நாடு திரும்பவுள்ளார்.