வவுனியாவில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

251

வவுனியா நெடுங்கேணி பழையமாமடு பகுதியிலிருந்து இன்று (18.03.2017) காலை 10 மணியளவில் குடும்பஸ்தர் ஒரவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

கடந்த வியாழக்கிழமையிலிருந்து காணாமற்போன ஒரு பிள்ளையின் தந்தையான ஜெயபாலன் தர்மசீலன் என்ற 34 வயது குடும்பஸ்தரைக் காணவில்லை என்று உறவினர்கள் தேடியுள்ளனர்.

எனினும் வேலைகளுக்குச் சென்றிருப்பதாகவும், வருவார் என்றும் நினைத்துக்கொண்டிருந்துள்ளனர். நேற்றும் குறித்த நபர் வீடு வராததையடுத்து மேலும் தேடுதலை மேற்கொண்டபோது நேற்று மாலை கிணற்றிற்குள் குறித்த நபரின் சடலம் இருப்பது தெரியவந்தள்ளது.

இன்று காலை சம்பவ இடத்திற்கச் சென்ற பதில் நீதவான் சடலத்தை பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் சடலத்தினை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

திருமணமாகி மனைவி மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் ஒரு பிள்ளையுடன் வசித்து வருவதாகவும் இருவருக்கிடையே கருத்து முரண்பாடு காரணமாக சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை நெடுங்கேணிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.