வவுனியாவில் கடந்த 23 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டுவரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (18.03.2017) 23வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இப் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குமாறு போராட்டக்காரர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றனர்.