யாழ் சிறையில் இருந்த இந்திய பிரஜை தப்பியோட்டம்!!

243

யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நபர் வீசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்து ஆடை விற்பனையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

குறித்த நபர் சில காலம் விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

44 வயதான இந்த இந்திய பிரஜையை தமிழகத்தை சேர்ந்தவர் எனவும் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அவர் யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.