வவுனியா ஓமந்தையில் துப்பாக்கி மீட்பு : பொலிஸாரின் விசாரணை தீவிரம்!!

1140

ஓமந்தையில் மிருகங்களை வேட்டையாட வைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கியொன்று பொலிஸாரால் மீட்க்கப்பட்டது. குறித்த துப்பாக்கி நேற்று(18.03.2017) மாலை புதிய சின்னக்குளம் காட்டுப்பகுதியில் மீட்க்கப்பட்டுள்ளது.

பொதுமகனொருவரால் ஓமந்தை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்தே சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் துப்பாக்கியினை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.