வவுனியாவில் வீதியில் இருக்கும் தாய்மாரின் கண்ணீருக்கு பதில் என்ன? : போராட்டத்தில் இளைஞர்கள்!!

1019

 
வவுனியாவில் 24ஆவது நாளாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (19.03.2017) 24வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (19.03.2017) மதியம் 2.30 மணியளவில் வவுனியா மாவட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடைபெறும் இடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீதியில் இருக்கும் தாய்மாரின் கண்ணீருக்கு பதில் என்ன? , அரசே காணாமல் ஆக்கப்படோருக்கு பதில் கூறு, அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய் என பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் கவனயீர்ப்புப் போராடத்தில் ஈடுபட்டனர்.