வவுனியா வைரப்புளியங்குளம் குளக்கட்டை ஆக்கிரமித்துள்ள பாத்தீனியம் செடிகள்!!

685

 
வவுனியா வைரப்புளியங்குளம் குளக்கட்டு வீதியில் பாதீனியச் செடிகள் தோட்டம் போன்று வளர்ந்து காணப்படுகின்றது.

வைரவப்புளியங்குளத்தில் இருந்து பண்டாரிகுளம் நோக்கிச் செல்லும் ஆதிவிநாயகர் ஆலயம் அருகில் உள்ள குளக்கட்டு வீதியில் பரவலாக பாதீனியம் செடிகள் வீதியால் பயணிப்பவர்களை மறைக்கும் அளக்கு உயரமாக வளர்ந்துள்ளது. இதனால் பாடசாலை செல்லும் சிறிய மாணவ, மாணவிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதுடன், அச் செடி வேகமாக பரவலடைந்தும் வருகின்றது.

வவுனியா நகருக்கு அண்மித்ததாகவுள்ள இப்பகுதியில் உள்ள பாதீனியச் செடிகளை அகற்றுவதற்கு உரியவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமையால் அந்தச் செடிகள் தற்போது தோட்டச் செய்கை போன்று வளர்ந்து உயர்ந்து காட்சியளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.