13 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த அதிசயம்!!

476

baby

இந்திய கர்நாடக மாநிலத்தில் 7ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நந்திஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்வேதா(13). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்குச் செல்வதற்கு முன் கடுமையான வயிற்று வலியால் துடித்துள்ளார்.

இதனைப் பார்த்த பெற்றோர் உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறி உடனடியாக மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



அங்கு அழகான ஆண் குழந்தையை ஸ்வேதா பெற்றெடுத்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் மருத்துவர்கள் விசாரித்தபோது தனது மகள் கர்ப்பமாக இருப்பது தெரியாது என்றனர்.

பின்பு மயக்கம் தெளிந்த சிறுமியிடம் விசாரித்தபோது, அவரது மாமா நவீன்(23) தான் கர்ப்பத்துக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இதனை கேள்விபட்ட பெண்கள் அமைப்பினர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமானவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நவீனை கைது செய்த பொலிசார் அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்.