மோசடி புகாரில் சிக்குகிறார் பவர்ஸ்டார் : மீண்டும் சிறை செல்கிறார்?

296

power

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது கடன் தருவதாக கூறி பண மோசடி செய்து விட்டதாக வடமாநில பொறியாளர் ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது சமீபத்தில் பல பண மோசடி புகார்கள் எழுந்தது. இதையொட்டி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த அவர் மீது மீண்டும் ஒரு மோசடி புகார் கூறப்பட்டுள்ளது.

தனக்கு 25 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியதாகவும் அதற்கு முன்பணமாக தாம் 50 லட்சத்தையும் அவரிடம் கொடுத்ததாகவும் ஆனால் 2 ஆண்டுகளாகியும் இதுவரை அவர் தமக்கு ஒரு ரூபாய் கூட தரவில்லை என்று கூறி வடமாநில பொறியாளர் ஒருவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பொலிசில் புகார் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பவர் ஸ்டார் சீனிவாசனை எந்த நேரத்திலும் பொலிசார் கைது செய்யலாம் எனக் கூறப்படுகிறது.