வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

286

வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் வைத்து நபர் ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

கிளிநொச்சிப் பகுதியிலிருந்து ஒரு கிலோ 700 கிராம் கேரள கஞ்சாவினை பொதி செய்து எடுத்து வந்த மொனாராகல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் இன்று (19.03.2017) மதியம் 1 மணியளவில் மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து வன்னிப் பிராந்தியப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் செயற்படும் போதை ஒழிப்பு பிரிவிற்கு கிடைத்த தகவல் அடிப்படையில் குறித்த நபரைக் கைது செய்துள்ளதாகவும் வவுனியா மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளிமாவட்டத்திற்குச் செல்ல முற்பட்டபோது கைது செய்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.