படம் பார்த்து அதிகமாக சிரித்த வாலிபர் மரணம்!!

468

heart

மும்பையில் கிராண்ட் மஸ்தி இந்தி படம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த வாலிபர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.

மும்பை வசாய் பகுதியைச் சேர்ந்தவர் மங்கேஷ் போகல்(22). இவர் தனது காதலியுடன் கிராண்ட் மஸ்தி இந்தி படம் பார்க்க தியேட்டருக்கு சென்றுள்ளார்.

படத்தில் ஏராளமான கொமடி காட்சிகள் உள்ளன. அவற்றை பார்த்த மங்கேஷ் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கையிலேயே அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது.



உடனே அவரை வசாயில் உள்ள கார்டினல் கிராசியாஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மங்கேஷ் படத்தை பார்த்து பயங்கரமாக சிரித்ததாக அவர் அருகில் அமர்ந்திருந்தவர்கள் தெரிவித்தனர். சிரித்து சிரித்து ஒருவர் மரணம் அடைந்தது திரையரங்கில் இருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.