வவுனியாவில் களஞ்சியசாலை உடைக்கப்பட்டு திருட்டு!!

250

 
வவுனியா பொதிமண்டப (குட்சைட் வீதி) வீதியிலுள்ள களஞ்சிய சாலை நேற்று (19.03) இரவு உடைக்கப்பட்டு பெறுமதியான பணம், காசோலை கொள்ளையிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,

நேற்று முன்தினம் சனிக்கிழமை தமது கடமைகளை நிறைவு செய்த பின்னர் இரவு 8.30 மணியளவில் குறித்த களஞ்சியசாலையினை மூடிவிட்டுச் சென்றுள்ளனர் பணியாளர்கள்.

நேற்று ஞாயிற்றுக்கிமை விடுமுறை என்பதால் களஞ்சியசாலையில் பணிகள் எதுவும் இடம்பெறவில்லை. இன்று (20.03.2017) காலை 7.30 மணியளவில் களஞ்சியசாலையினை திறந்பதற்குச் சென்ற ஊழியர் களஞ்சியசாலை உடைக்கப்பட்டு திருட்டு போயுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து களஞ்சியசாலை உரிமையாளரூடாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த களஞ்சியசாலையிலிருந்து வட்டவல தேயிலை, பால் பைக்கற் போன்றவற்றை வியாபார நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

குறித்த களஞ்சியசாலை நேற்று இரவே உடைக்கப்பட்டுள்ளதாகவும், களஞ்சியசாலையிலிருந்து 43 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபா வரையான பணம், காசோலை இருந்துள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.