20 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம் : 72 பேர் பலி!!(வீடியோ)

373

பெரு நாட்டில் கடந்த இரண்டு தசாப்தங்களில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் குறைந்த 72 பேர் பலியாகியுள்ளதாக இதுவரை தெரியவந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல நாட்களாக பெய்த கன மழையால் ஆறுகள் நிரம்பி பல பகுதிகளில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. 800க்கும் மேலான நகரங்களில் அவசரக் கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது; தலைநகர் லிமாவில் திங்கட்கிழமையிலிருந்து குடிநீர் கிடைக்கவில்லை.

கடலின் வெப்பநிலை அதிகரிப்பதால், நீராவியாதல் அதிகரித்து கனமழையை பொழியச் செய்யும் நிகழ்வாக கருதப்படும் எல் நினோ என்னும் பாதிப்பால், பெரு மற்றும் பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகள் இந்த ஆண்டின் கோடைக் காலத்தில் நிலையற்ற வானிலையை சந்தித்து வருகின்றன.