பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதை பொலிஸ் நேர்காணலில் அம்பலமாக்கிய இளைஞன் கைது!!

262

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் பெண் ஒரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யதை, பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் பணிக்­கான நேர்­முகத் தேர்­வின்­போது தற்­செ­ய­லாக ஒப்­புக்­கொண்ட நிலையில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

மேற்கு வேர்­ஜீ­னி­யாவைச் சேர்ந்த 21 வய­தான டெய்லர் றே பிறைஸ் எனும் இந் ­நபர், பெண் ஒரு­வ­ருடன் இரவு நேரத்தில் மது­பானம் அருந்­திய பின், அப் பெண் மயக்­க­ம­டைந்­தி­ருந்த வேளையில், அவரின் சம்­ம­த­மின்றி பாலியல் உறவு கொண்­டாராம். அத்­துடன் இக்­ காட்­சியை செல்­போனில் படம்­பி­டித்து வைத்­தி­ருந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

நேர்­முகத் தேர்­வுக்குச் சென்­றி­ருந்த வேளையில் பொலிஸ் அதி­காரி ஒரு­வ­ருடன் உரை­யாடிக் கொண்­டி­ருந்த இந்த இளைஞர், தான் பெண் ஒரு­வ­ருடன் மது­பானம் அருந்­திய பின் அவ­ருடன் பாலியல் உறவு கொண்­ட­தாக தெரி­வித்­தி­ருந்தார். அக் ­காட்­சியை படம்­பி­டித்து வைத்­தி­ருப்­ப­தையும் அவர் ஒப்­புக்கொண் டார்.

இரு வாரங்­களின் பின்னர், மேற்­படி யுவ­தி­யிடம் பொலிஸார் வாக்­கு­மூலம் பெற்­றனர். டெய்லர் றே பிறை­ஸுடன் பாலியல் உறவில் ஈடு­ப­டு­வ­தற்கு இப் பெண் சம்­மதம் தெரி­வித்­தி­ருந்­தாரா என பொலி­ஸாரால் வின­வப்­பட்­டது.

டெய்லர் றெ பிறை­ஸுடன் பாலியல் உறவில் ஈடு­ப­டு­வ­தற்கு தான் சம்­மதம் தெரி­விக்­க­வில்லை எனவும், உண்­மையில் அவ­ருடன் தான் பாலியல் உறவில் ஈடு­பட்ட விட­யமே பொலிஸார் கூறும் வரை தனக்குத் தெரியாது எனவும் அப் பெண் கூறினார். அதையடுத்து, டெய்லர் றெ பிறைஸை பொலிஸார் கைது செய்துள்ளனர்.